Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சம்பவம்" செய்றாரு ரேவந்த் ரெட்டி.. யார்னு பாருங்க? கேசிஆரே மிரளுறாரு.. தெலுங்கானா காங்கிரஸில் புயல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல், 10 வருட முதல்வராக இருந்த கேசிஆருக்கு, திடீரென குடைச்சலை தந்தே, அதிர வைத்துக் கொண்டிருக்கிறார் ரேவந்த் ரெட்டி.. யார் இந்த ரேவந்த் ரெட்டி?

தெலுங்கானாவில் காங்கிரஸ் என்னவோ வழக்கமான பாணியில்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், ரேவந்த் ரெட்டி மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தான், புது மாற்றமும், புது தெம்பும், புது வேகமும், கதர் கட்சிக்கே வந்துவிட்டதாக சொல்லப்பட்டது.. இதற்கெல்லாம் காரணம் ரேவந்த் ரெட்டிதான்.

Do you know who is this Revanth Reddy and Will Congress state chief Revanth Reddy defeat KCR

2 தொகுதிகள்: அதனால்தானோ என்னவோ, முதல்வர் சந்திரசேகர் ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.. கேசிஆரை போலவே, 2 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்.

ஒருவேளை, இந்த தேர்தலில் ரெட்டி வெற்றி பெற்றுவிட்டால், மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்பார் என்ற செய்திகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.. அந்தவகையில் கர்நாடகாவை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் பாஜகவுக்கு கிலியை தரும் இந்த ரெட்டியின் அரசியல் சற்று சுவாரஸ்யமானது..

சுயேச்சை: ஆரம்ப காலத்தில் இவர் ஒரு பாஜக ஆதரவாளர். அதாவது, ஏபிவிபியில் காலடி வைத்துதான், அரசியலுக்கு வந்தார்.. பிறகு சுயேச்சையாக போட்டியிட்டு, எம்எல்ஏவானார்.. பிறகு, தெலுங்குதேசம் பக்கம் போனார். அங்கேயும் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அடுத்தடுத்த வெற்றியால், தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக உயர்ந்த ரெட்டி, 2017-ல் தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்..

பல கட்சிகளுக்கு சென்று வந்த நிலையிலும், ரெட்டி மீது மிகுந்த மரியாதையையும், கனத்த நம்பிக்கையையும் வைத்தது காங்கிரஸ் மேலிடம்.. இந்த நம்பிக்கைதான், ரெட்டியை, மிக முக்கிய தலைவராக தெலுங்கானா காங்கிரஸில் உயர்த்தியது.. எம்எல்ஏவாக உயர்ந்தார்.. பிறகு எம்பியாக உயர்ந்தார்.. பிறகு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார்.

ரேவந்த் ரெட்டி: 10 வருடம் தெலுங்கானாவை ஆண்ட கேசிஆருக்கு இணையாக ரெட்டியையே முன்னிறுத்தி செக் வைத்தது காங்கிரஸ் மேலிடம்.. தேர்தலுக்கு முந்தைய மற்றும் எக்ஸிட் போல் கணிப்புகளின்படி, காங்கிரஸே வெற்றி பெறும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், ரேவந்த் ரெட்டியே முதல்வராக அரியணை ஏறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, ரெட்டியை முதல்வராக அங்கீகரித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே அதிருப்திகள் வெடிக்க தயாராக உள்ளதாம்.. ஏனென்றால், ரெட்டியை பொறுத்தவரை, எல்லா கட்சிகளிலும் ரவுண்டு அடித்துவிட்டு வந்திருப்பவர். இதனால், அவரை முழுக்க முழுக்க காங்கிரஸ் முகமாக ஏற்க ஒருவித தயக்கம் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இருப்பதாக தெரிகிறது.

இன்று முடிவு: எனினும், எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும், கேசிஆர் என்ற பிரம்மாண்ட தலைவரை, மண்ணை கவ்வ செய்திருக்கும் ரெட்டியை, முதல்வர் பதவியில் உட்கார வைத்து, காங்கிரஸ் மேலிடம் அழகு பார்க்கவே செய்யும் என்கிறார்கள்.

ஆக, 2 முறை முதல்வர் பதவி வகித்த சந்திரசேகர் ராவை வீழ்த்த கமரெட்டி தொகுதியில் களம் கண்ட ரேவந்த் ரெட்டி வெற்றி பெறுவாரா? ஒரே நேரத்தில் கமரெட்டி தொகுதியையும், தெலங்கானா முதல்வர் பதவியையும் சந்திரசேகர் ராவிடமிருந்து தட்டி பறிப்பாரா? மாநில முதல்வராக ஒருமனதாக அங்கீகரிக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+