சாகும் வயதா இது? இரவில் நெஞ்சு வலியால் துடித்த 13 வயது சிறுமி.. காலையில் மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 13 வயது சிறுமி தனது நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் போடா ஸ்ரவந்தி. இவருக்கு 13 வயது. இவர் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை விவசாயி.
அவர்களுக்கு ஸ்ரவந்தி இரண்டாவது குழந்தை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

விடுமுறை
இதையடுத்து ஸ்ரவந்தி விடுமுறையையொட்டி தனது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடியுள்ளார். பிறகு அவர் வீட்டிற்கு சென்று அங்கு தனது தாத்தா பாட்டியுடன் படுத்துள்ளார். அப்போது திடீரென சிறுமி நள்ளிரவு 12.30 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அப்போது தனது பாட்டியை எழுப்பி மார்பு பகுதியில் வலிப்பதாக கூறியுள்ளார்.

சிறுமிக்கு மூச்சுவிடுவதில் கடினம்
மேலும் சிறிது நேரத்தில் சிறுமிக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சிறுமி மயங்கினார். பின்னர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினர். உடனே சிறுமிக்கு சிபிஆர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணமடைந்தார். அண்மைக்காலமாக சிறுவர்கள், சிறுமிகளிடம் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இளைஞர்கள், மாணவர்களு்குக் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதே தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தில் 15 நாட்களில் 6 பேர் மாரடைப்பால் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை மரணங்கள்
அண்மையில் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் ஷியாம் யாதவ் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து பலியானார். அது போல் கபடி போட்டியில் கரூர் மாவட்டத்தில் பங்கேற்ற 26 வயது இளைஞர் மாணிக்கம் கபடி விளையாடும் போது மாரடைப்பால் பலியானார். இது போல் குடும்ப விழாக்களில் நடனம் ஆடும் போதும் சிலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதயத்திற்கு அதிகமாக வேகம் கொடுப்பதால் இது போன்று மாரடைப்பு ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.

கபடி மைதானம்
ஆந்திராவில் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் அச்சம்பள்ளிதாண்டாவைச் சேர்ந்த 18 வயதான தனுஷ்குமார் நாயக், கடந்த மாதம் கல்லூரி மைதானத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவ்வாறு மாரடைப்பு ஏற்படும் போது சிபிஆர் செய்தும் சில் பிழைத்துளளனர். அது போல் சிபிஆர் சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications