ஆந்திரா Vs தெலுங்கானா:நள்ளிரவில் திடீரென 'யுத்த' களமான நாகர்ஜூன சாகர் அணை! 2 மாநில போலீஸ் மோதல்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தெலுங்கானா தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் நேற்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே நாகர்ஜூன சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லைகளில்தான் நாகர்ஜூன சாகர் அணை உள்ளது.

நாகர்ஜூன சாகர் அணை குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் உள்ளது. இந்த அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவுக்கு சொந்தமானவை; 14 முதல் 29 வரையிலான மதகுகள் ஆந்திராவுக்கு சொந்தமானவை. நாகர்ஜூன சாகர் அணை திறப்பு என்பது கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகர்ஜூன சாகர் அணையில் இருந்து 2,000 கன அடிநீரை குடிநீர் பயன்பாட்டுக்காக திறக்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. இதற்காக நாகர்ஜூன சாகர் அணைக்கு ஆந்திரா அதிகாரிகள் சென்றனர். ஆனால் அங்கிருந்த தெலுங்கானா அதிகாரிகளோ, அவர்களை நாகர்ஜூன சாகர் அணைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். அத்துடன் அந்த அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்புகளையும் தெலுங்கானா அதிகாரிகள் போட்டு வைத்தனர். நாகர்ஜூன சாகர் அணை கட்டுப்பாட்டு அறையையும் பூட்டிவிட்டனர்.
#Nalgonda
— Akalankam Seshu (@ienalgonda) November 30, 2023
Tension prevailed at Nagarjunasagar dam. Andhra Pradesh Police entered into Telangana limits and damaged CC cameras.@XpressHyderabad @NewIndianXpress @Kalyan_TNIE @balaexpressTNIE pic.twitter.com/WLONQl7XiY
இதனால் கொந்தளித்த ஆந்திரா அதிகாரிகள் 1,000க்கும் அதிகமான போலீசாரை அங்கு குவித்தனர். பின்னர் தெலுங்கானாவின் தடையை உடைத்து தங்களுக்கு உரிய மதகுகளில் அணை நீரை திறந்துவிட்டனர். இதனை எதிர்பார்க்காத தெலுங்கானா அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கு பதிலடியாக புதிய மோட்டார்களை கொண்டு வந்து தங்களது எல்லைப் பகுதி மின்சாரம் மூலமாக இயக்கினர்.
#Nalgonda
— Akalankam Seshu (@ienalgonda) November 30, 2023
Tension prevailed at Nagarjunasagar dam. Andhra Pradesh Police entered into Telangana limits and damaged CC cameras.@XpressHyderabad @NewIndianXpress @Kalyan_TNIE @balaexpressTNIE pic.twitter.com/WLONQl7XiY
இதனால் நேற்று இரவு சுமார் 2 மணிநேரம் நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இரு மாநிலங்களிடையேயான போக்குவரத்தும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அதிகாரிகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இரு மாநிலங்களிடையே மோதல் வெடித்திருப்பதால் பதற்றம் தொடருகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications