Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா Vs தெலுங்கானா:நள்ளிரவில் திடீரென 'யுத்த' களமான நாகர்ஜூன சாகர் அணை! 2 மாநில போலீஸ் மோதல்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தெலுங்கானா தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 Telangana Vs Andhra: Two States Police clash at Nagarjunasagar Dam

தெலுங்கானாவில் நேற்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே நாகர்ஜூன சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லைகளில்தான் நாகர்ஜூன சாகர் அணை உள்ளது.

 Telangana Vs Andhra: Two States Police clash at Nagarjunasagar Dam

நாகர்ஜூன சாகர் அணை குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் உள்ளது. இந்த அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவுக்கு சொந்தமானவை; 14 முதல் 29 வரையிலான மதகுகள் ஆந்திராவுக்கு சொந்தமானவை. நாகர்ஜூன சாகர் அணை திறப்பு என்பது கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது.

 Telangana Vs Andhra: Two States Police clash at Nagarjunasagar Dam

இந்த நிலையில் நாகர்ஜூன சாகர் அணையில் இருந்து 2,000 கன அடிநீரை குடிநீர் பயன்பாட்டுக்காக திறக்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. இதற்காக நாகர்ஜூன சாகர் அணைக்கு ஆந்திரா அதிகாரிகள் சென்றனர். ஆனால் அங்கிருந்த தெலுங்கானா அதிகாரிகளோ, அவர்களை நாகர்ஜூன சாகர் அணைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். அத்துடன் அந்த அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்புகளையும் தெலுங்கானா அதிகாரிகள் போட்டு வைத்தனர். நாகர்ஜூன சாகர் அணை கட்டுப்பாட்டு அறையையும் பூட்டிவிட்டனர்.

இதனால் கொந்தளித்த ஆந்திரா அதிகாரிகள் 1,000க்கும் அதிகமான போலீசாரை அங்கு குவித்தனர். பின்னர் தெலுங்கானாவின் தடையை உடைத்து தங்களுக்கு உரிய மதகுகளில் அணை நீரை திறந்துவிட்டனர். இதனை எதிர்பார்க்காத தெலுங்கானா அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கு பதிலடியாக புதிய மோட்டார்களை கொண்டு வந்து தங்களது எல்லைப் பகுதி மின்சாரம் மூலமாக இயக்கினர்.

இதனால் நேற்று இரவு சுமார் 2 மணிநேரம் நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இரு மாநிலங்களிடையேயான போக்குவரத்தும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல நாகர்ஜூன சாகர் அணையில் ஆந்திரா, தெலுங்கானா அதிகாரிகள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இரு மாநிலங்களிடையே மோதல் வெடித்திருப்பதால் பதற்றம் தொடருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+