மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்
ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளாவை பின்பற்றி பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற இத்தீர்மானங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேக ராவ் நீண்ட மவுனம் காத்து வந்தார்.
தற்போது மவுனத்தை கலைத்துள்ளார் சந்திரசேகர ராவ். சி.ஏ.ஏ. குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது:
இந்தியா என்கிற நாடு மக்களுக்கானது. மதங்களுக்கானது அல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் 100% தவறான முடிவு. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்.
இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களிடமும் பேசியிருக்கிறேன்.
இதுவரை 16 மாநில முதல்வர்களிடம் சி.ஏ.ஏ. குறித்து பேசியிருக்கிறேன். சில மாநில கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி இருக்கிறேன். அனைவருமே சி.ஏ.ஏ. குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
ஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மாநில முதல்வர்களின் மாநாடு விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications