மவுனம் கலைத்தார் சந்திரசேகர ராவ்... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம்
ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளாவை பின்பற்றி பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற இத்தீர்மானங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேக ராவ் நீண்ட மவுனம் காத்து வந்தார்.
தற்போது மவுனத்தை கலைத்துள்ளார் சந்திரசேகர ராவ். சி.ஏ.ஏ. குறித்து சந்திரசேகர ராவ் கூறியதாவது:
இந்தியா என்கிற நாடு மக்களுக்கானது. மதங்களுக்கானது அல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய அரசின் 100% தவறான முடிவு. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்.
இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களிடமும் பேசியிருக்கிறேன்.
இதுவரை 16 மாநில முதல்வர்களிடம் சி.ஏ.ஏ. குறித்து பேசியிருக்கிறேன். சில மாநில கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி இருக்கிறேன். அனைவருமே சி.ஏ.ஏ. குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
ஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மாநில முதல்வர்களின் மாநாடு விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானா சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications