வானத்தில் இருந்து திடீரென பொத்து, பொத்து என விழுந்த மீன்கள்.. குழம்பிய பொதுமக்கள்.. அதென்ன மீன் மழை?
ஹைதராபாத்: தெலங்கானாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு நடந்த சுவாஸிய சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் இப்போது பல பகுதிகளில் பருவ மழையில் தொடங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழையில் பனிக்கட்டிகள் அப்படியே விழும் ஆலங்கட்டி மழை குறித்து நாம் கேள்விப் பட்டு இருப்போம். ஆனால், தெலங்கானாவில் வானத்தில் இருந்து மீன்கள் விழும் மீன் மழை பொழிந்து உள்ளது.

எதிர்பார்க்கவில்லை
நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. மழையை எதிர்பார்த்து மக்கள் காத்து இருந்தாலும் கூட, வானத்தில் இருந்து மீன் மழை பெய்யும் என்று தெலங்கானா மக்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

மீன் மழை
தெலுங்கானாவின் ஜக்தியால் நகரத்தில் வானத்தில் இருந்து திடீரென மீன் மழை பொழிந்ததில் அந்த ஊர் மக்கள் குழம்பிவிட்டனர். தெலுங்கானாவின் ஜக்தியால் நகரில் சில நாட்களுக்கு முன்பு வானத்தில் மீன்கள் மழை பொழிவதைக் கண்ட பலரும் குழப்பமடைந்தனர். இந்த அரிய நிகழ்வைப் பதிவு செய்த சிலர் இந்த வீடியோவை இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். மழையில் விழுந்த மீன் உடன் அப்பகுதி மக்கள் விளையாடும் காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏன் இப்படி
இந்த அறிய நிகழ்வு rain of animals என்று அழைக்கப்படுகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்யும் வானிலையே முக்கிய காரணம் ஆகும். இந்த அரிய நிகழ்வின்போது, நண்டுகள், சிறிய மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற நீர்நிலைகளில் வாழும் சிறிய விலங்குகள் அங்கிருந்து வானத்திற்கு இழுக்கப்படும். அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் சக்தியை இழக்கும் போது, இந்த சிறு விலங்குகள் மழையாகப் பொழிந்து மக்களை ஆச்சரியப்படுத்தும்.

முதல்முறை இல்லை
இது அரிய நிகழ்வு என்றாலும் கூட கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் கூட இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப்பிரதேசத்தின் படோஹி மாவட்டத்திலும் இதேபோல மீன் மழை பொழிந்தது. அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்த போது, சிறு மீன்கள் மழையாகப் பொழிந்தது.

மீன்கள்
இதையடுத்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மழையின்போது விழுந்த மீன்களைச் சேகரிக்கத் தொடங்கினர். வீட்டின் மாடிகள், வயல்வெளிகள் என மொத்தம் 50 கிலோ மீன்களை கிராம மக்கள் சில மணி நேரங்களில் சேர்த்தாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களில் பலர் பின்னர் மீன்கள் விஷமாக இருக்கலாம் என்று அஞ்சி மீன்களை அப்படியே அருகே இருந்த குளங்களில் வீசினர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications