Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானத்தில் இருந்து திடீரென பொத்து, பொத்து என விழுந்த மீன்கள்.. குழம்பிய பொதுமக்கள்.. அதென்ன மீன் மழை?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு நடந்த சுவாஸிய சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் இப்போது பல பகுதிகளில் பருவ மழையில் தொடங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மழையில் பனிக்கட்டிகள் அப்படியே விழும் ஆலங்கட்டி மழை குறித்து நாம் கேள்விப் பட்டு இருப்போம். ஆனால், தெலங்கானாவில் வானத்தில் இருந்து மீன்கள் விழும் மீன் மழை பொழிந்து உள்ளது.

 எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. மழையை எதிர்பார்த்து மக்கள் காத்து இருந்தாலும் கூட, வானத்தில் இருந்து மீன் மழை பெய்யும் என்று தெலங்கானா மக்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

 மீன் மழை

மீன் மழை

தெலுங்கானாவின் ஜக்தியால் நகரத்தில் வானத்தில் இருந்து திடீரென மீன் மழை பொழிந்ததில் அந்த ஊர் மக்கள் குழம்பிவிட்டனர். தெலுங்கானாவின் ஜக்தியால் நகரில் சில நாட்களுக்கு முன்பு வானத்தில் மீன்கள் மழை பொழிவதைக் கண்ட பலரும் குழப்பமடைந்தனர். இந்த அரிய நிகழ்வைப் பதிவு செய்த சிலர் இந்த வீடியோவை இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். மழையில் விழுந்த மீன் உடன் அப்பகுதி மக்கள் விளையாடும் காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த அறிய நிகழ்வு rain of animals என்று அழைக்கப்படுகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்யும் வானிலையே முக்கிய காரணம் ஆகும். இந்த அரிய நிகழ்வின்போது, ​​நண்டுகள், சிறிய மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற நீர்நிலைகளில் வாழும் சிறிய விலங்குகள் அங்கிருந்து வானத்திற்கு இழுக்கப்படும். அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் சக்தியை இழக்கும் போது, ​​இந்த சிறு விலங்குகள் மழையாகப் பொழிந்து மக்களை ஆச்சரியப்படுத்தும்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

இது அரிய நிகழ்வு என்றாலும் கூட கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் கூட இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப்பிரதேசத்தின் படோஹி மாவட்டத்திலும் இதேபோல மீன் மழை பொழிந்தது. அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்த போது, சிறு மீன்கள் மழையாகப் பொழிந்தது.

மீன்கள்

மீன்கள்

இதையடுத்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மழையின்போது விழுந்த மீன்களைச் சேகரிக்கத் தொடங்கினர். வீட்டின் மாடிகள், வயல்வெளிகள் என மொத்தம் 50 கிலோ மீன்களை கிராம மக்கள் சில மணி நேரங்களில் சேர்த்தாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களில் பலர் பின்னர் மீன்கள் விஷமாக இருக்கலாம் என்று அஞ்சி மீன்களை அப்படியே அருகே இருந்த குளங்களில் வீசினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+