"தாலியை கழட்டினால்தான் தேர்வறைக்கு செல்ல முடியும்" -தெலங்கானாவில் கொடுமை! இந்து அமைப்புகள் எதிர்ப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் அரசு தேர்வு எழுதச் சென்ற பெண்கள் தாலியை கழட்டிய பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில், முஸ்லிம் பெண்கள் புர்காவும், ஹிஜாபும் அணிந்து செல்ல அதிகாரிகள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரியும் நிலையில், தற்போது தாலியை கழட்ட சொன்ன விவகாரம் கடும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

முடிவடையாத ஹிஜாப் சர்ச்சை..
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது. இது, கர்நாடகாவையும் தாண்டி பல மாநிலங்களிலும் எதிரொலித்தது. முஸ்லிம் மாணவிகளை ஹிஜாபை கழட்டுமாறு வற்புறுத்தும் சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "சீக்கியர்கள் அவர்களின் மத அடையாளமான டர்பன் அணியலாம்; இந்துக்கள் திருநீறு பூசலாம்.. ஏன், நாங்கள் மட்டும் ஹிஜாப் அணியக்கூடாது?" என்பதே முஸ்லிம் பெண்கள் பொதுவாக முன்வைக்கும் கேள்வியாக உள்ளது.

தெலங்கானாவில் புது சர்ச்சை
ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில், தெலங்கானாவில் ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் வித்யார்த்தி ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தெலங்கானா அரசுத் தேர்வு வாரியம் (டிஎஸ்பிஎஸ்சி)நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இந்தக் கல்லூரியும் ஒரு தேர்வு மையமாக இருந்தது. இங்கு நூற்றுக்கணக்கான தேர்வர்கள் நேற்று காலை வந்தனர்.

தாலியை கழட்டுங்கள்..
அப்போது தேர்வறைகளுக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு வந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த நெக்லஸ்கள், வளையல்கள் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தேர்வறைக்கு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அனைத்தையும் கழட்டி வைத்த பெண்கள் தாலியை மட்டும் கழட்டாமல் இருந்தனர். ஆனால், தாலியையும் கழட்டி வைத்தால்தான் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலிகளை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதினர்.

புர்காவுக்கு அனுமதி
அதே சமயத்தில், முஸ்லிம் பெண்களுக்கு பெரிய அளவில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, புர்கா, ஹிஜாப் அணிந்தவாறே முஸ்லிம் பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், ஊடகங்களில் வெளியாகி தெலங்கானா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அடிலாபாத் எஸ்.பி. உதய்குமார் ரெட்டி, "தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு போலீஸார் கூறியது உண்மைதான். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சரியான புரிதல் இல்லாமல் போலீஸார் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

பாஜக எதிர்ப்பு
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா பாஜக மூத்த தலைவர் ப்ரீத்தி காந்தி கூறுகையில், "சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் அரசியலில் டிஆர்எஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. உடலையே மூடிக்கொள்ளும் புர்கா உடையை அனுமதிப்பார்களாம். ஆனால், கழுத்தில் மெல்லியதாக இருக்கும் தாலியை அனுமதிக்க மாட்டார்களாம். இது என்ன மாதிரியான அரசியல்? இந்து பெண்களை இழிவுப்படுத்தியதற்காக முதல்வர் சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications