தெலங்கானா சட்டசபைத் தேர்தல்.. சரியும் பிஆர்எஸ் செல்வாக்கு! பிரசாந்த் கிஷோரை நாடிய சந்திரசேகர ராவ்?
ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், சந்திரசேகர ராவின் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. எனவே இதனை சரி செய்ய பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை, அம்மாநில முதலமைச்சரும் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கட்சி மீதான மக்கள் செல்வாக்கை அதிகரிக்க பிஆர்எஸ் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது.

அதாவது பொதுவாக தேர்தலுக்கு முன்னர் உளவுத்துறை ஆளும் கட்சிக்கு ஒரு அறிக்கையை கொடுக்கும். அதில் மாநில மக்களின் ஆதரவு ஆட்சிக்கும், கட்சிக்கும் எவ்வாறு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிதான் தற்போது தெலங்கானாவில் மக்களின் மனநிலை, ஆளும் கட்சிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்த உளவுத்துறை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை சரிகட்ட தான் பிரசாந்த் கிஷோரை கட்சி நாடியிருக்கிறது. அம்மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் இருக்கின்றன. எனவே இந்த குறுகிய நேரத்தில் பிரச்னைகளை சரி செய்ய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவ் ஆகியோர் பிரசாந்த் கிஷோரிடம் நேற்று 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சமூக ஆர்வலரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான குருராஜ் அஞ்சன் கூறியுள்ளார்.
கடந்த 2019ல் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த நிலையில், இவரை நம்பி கேசிஆர் களத்தில் இறங்கியுள்ளார். இவரது திட்டம் வெற்றி பெறுமா? என மிகுந்த எதிர்பார்ப்பு மேலெழுந்திருக்கிறது. எனவே இந்த விவகாரம் அம்மாநில அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications