சந்திரசேகர ராவை ‛லஞ்சு’க்கு அழைத்த உத்தவ் தாக்ரே.. பாஜகவுக்கு கட்டம் கட்டும் முதல்வர்கள்!
ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, பிப்ரவரி 20ல் மும்பையில் ‛லஞ்ச்' சாப்பிட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அழைத்துள்ளார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கட்டம் கட்ட மேற்கொள்ளும் முயற்சிக்கு இது பலம் சேர்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். காங்கிரஸின் ராகுல்காந்தி கேட்டது போல், ‛‛புல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான ஆதாரங்களை காட்டுங்கள்'' எனக்கூறினார்.
மேலும் ‛‛இந்தியாவில் வரி ஏற்றிய முட்டாள்களே அதை குறைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவை விரட்டியடிக்க தேசிய அரசியலிலும் ஈடுபடுவேன். மக்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என பேசி வருகிறார். மேலும் பாஜக கூட்டணியில் இல்லாத பிற மாநில கட்சி தலைவர்களை சந்திக்க சந்திர சேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

சந்திரசேகர ராவ்
விரைவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் தொடர்பில் உள்ள சந்திரசேகர ராவ் விரைவில் சந்தித்து பேச உள்ளார். மேலும் சந்திர சேகரராவின் சமீபத்திய பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா, ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமரான தேவேகவுடா ஆகியோர் தொலைபேசியில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மத்தியில் 3வது கூட்டணி
இதன்மூலம் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத 3ம் கூட்டணியை முன்னெடுக்க சந்திரசேகர ராவ் முயற்சிப்பது தெளிவாகிறது. மேலும் பிரதமர் பதவி மீது சந்திரசேகர ராவுக்கு ஆசை வந்துள்ளதாகவும், இதனால் தான் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் விமர்சிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன் மத்தியில் 3வது கூட்டணியை உருவாக்கி பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி முயற்சிப்பது போல் சந்திரசேகர ராவும் காய்நகர்த்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

லஞ்சுக்கு அழைப்பு
இந்நிலையில் தான் இன்று காலை மகாராஷ்ட்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் சந்திர சேகர ராவிடம் பேசியுள்ளார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்ததோடு, அரசியல் விஷயங்கள் குறித்து பேசி கொண்டனர். மேலும் பிப்ரவரி 20ம் தேதி மதிய உணவுக்கு(லஞ்ச்) மும்பைக்கு வரும்படி சந்திரசேகர ராவுக்கு, உத்தவ்தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். இது இந்திய அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

முழுஆதரவு அளிப்பதாக...
ஏனென்றால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா சமீபத்தில் விலகி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. தற்போதைய சூழலில் உத்தவ் தாக்கரேவும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் உள்ளார். இதனால் தான் இந்த அழைப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சந்திரசேகரராவின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛உத்தவ் தாக்கரே பிப்.,20ல் மதிய உணவுக்கு அழைத்துள்ளார். பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்க எப்போதும் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். கூட்டாச்சி உணர்வை உயர்த்தும் வகையில் பிரித்தாளும் விசைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் உங்கள் குரலை கொடுத்துள்ளீர்கள்'' என பாராட்டியதாக கூறப்பட்டுள்ளது.

உங்களுடன் நாங்கள்
இதற்கு பதிலாக, ‛‛மகாராஷ்டிராவில் நன்றாக ஆட்சி செய்கிறீர்கள். இந்த நல்லாட்சியை தொடருங்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்'' என சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரேவிடம் கூறியுள்ளார்.

யார் இவர்
தெலுங்கானா தனிமாநிலம் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தவர் தான் சந்திர சேகரராவ். இதையடுத்து ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிந்து 2014ல் தெலுங்கானா தனி மாநிலமாக மாற்றப்பட்டது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மூலம் ஆட்சியை பிடித்த சந்திரசேகரராவ் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்து 2வது முறையாக தெலுங்கானாவின் முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications