காஷ்மீரில் 10 ராணுவ வீரர்கள் மரணம்.. 200 அடி பள்ளத்தில் பாய்ந்த குண்டு துளைக்காத வாகனம்.. நாடே சோகம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தாக்கில் குண்டு துளைக்காத ராணுவ வாகனம் கவிழுந்ததில் அதில் பயணித்த 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 ராணு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் பதர்வா பகுதியில் இன்று குண்டு துளைக்காத ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 17 ராணுவ வீரர்கள் சென்றனர். இவர்கள் ராணுவ ஆபரேஷனுக்காக சென்று கொண்டிருந்தனர்.

இந்த வாகனம் பாதர்வா - சாம்பா ரோட்டில் கன்னி டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ராணுவ வாகனத்தில் பயணித்த வீரர்கள் அனைவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இணைந்து மீட்பு பணியை தொடங்கியது. அப்போது 4 வீரர்கள் பலியாகி இருந்தனர். 13 வீரர்கள் படுகாயமடைந்து இருந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்கப்பட்டனர். அப்போது மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.
மற்ற 7 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மேல் சிகிச்சை தேவையாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பபட்டுள்ளனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‛‛கஸ்பிர் ரக குண்டு துளைக்காத ராணுவ வாகனம் ஒன்று ஆபரேஷனுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கன்னி டாப் பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது'' என்றார். இந்த விபத்தில் மரணமடைந்த ராணு வீரர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது இந்திய ராணுவத்தின் 10 வீரமிக்க வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறப்பான சேவையையும், உன்னத தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.
துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், ஒட்டுமொத்த தேசமும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications