காஷ்மீரில் 10 ராணுவ வீரர்கள் மரணம்.. 200 அடி பள்ளத்தில் பாய்ந்த குண்டு துளைக்காத வாகனம்.. நாடே சோகம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தாக்கில் குண்டு துளைக்காத ராணுவ வாகனம் கவிழுந்ததில் அதில் பயணித்த 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 ராணு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் பதர்வா பகுதியில் இன்று குண்டு துளைக்காத ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 17 ராணுவ வீரர்கள் சென்றனர். இவர்கள் ராணுவ ஆபரேஷனுக்காக சென்று கொண்டிருந்தனர்.

இந்த வாகனம் பாதர்வா - சாம்பா ரோட்டில் கன்னி டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ராணுவ வாகனத்தில் பயணித்த வீரர்கள் அனைவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இணைந்து மீட்பு பணியை தொடங்கியது. அப்போது 4 வீரர்கள் பலியாகி இருந்தனர். 13 வீரர்கள் படுகாயமடைந்து இருந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்கப்பட்டனர். அப்போது மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.
மற்ற 7 பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மேல் சிகிச்சை தேவையாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பபட்டுள்ளனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‛‛கஸ்பிர் ரக குண்டு துளைக்காத ராணுவ வாகனம் ஒன்று ஆபரேஷனுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கன்னி டாப் பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது'' என்றார். இந்த விபத்தில் மரணமடைந்த ராணு வீரர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது இந்திய ராணுவத்தின் 10 வீரமிக்க வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது வீரர்களின் சிறப்பான சேவையையும், உன்னத தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.
துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில், ஒட்டுமொத்த தேசமும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications