10 காங். எம்.எல்.ஏக்களுக்கு பதவி, பணம் தருவதாக பாஜக பேரம்: கமல்நாத் ‘திடுக்’ தகவல்
போபால்: காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்களுக்கு பதவி மற்றும் பணம் தருவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேரம் பேசியதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகின. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாஜக குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டது.
மத்திய பிரதேச மாநில அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி பாஜக தரப்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த சவாலை முதல்வர் கமல்நாத் ஏற்றுக் கொண்டார்.
எக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு?
இந்நிலையில் தங்களது கட்சியின் 10 எம்.எல்.ஏக்களிடம் தொலைபேசியில் பாஜக தலைவர்கள் பணம் மற்றும் பதவி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என கமல்நாத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றும் கமல்நாத் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றும் கமல்நாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.