கோபத்தை கொட்டித் தீர்த்த ஃபனி.. 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்.. துயரத்தில் ஒடிஸா மக்கள்
Recommended Video
புவனேஸ்வரம்: ஒடிஸா மாநிலத்தில் நேற்று கரையை கடந்த போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிக்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எல்லாம் விடுக்கப்பட்டது. எனினும் புயலில் ஒரு டுவிஸ்டாக இந்த புயல் மெல்ல நகர்ந்து ஒடிஸாவை நெருங்கியது.
இதையடுத்து அந்த மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று புரி அருகே கோபால்பூர்-சந்த்பாலி இடையே ஃபனி கரையை கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

பொதுமக்கள் பாதிப்பு
இந்த பேய்க் காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் விநியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. 147 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் குழுமியிருந்தனர். நேற்று முன் தினம் முதலே விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.

விலங்குகள் சரணாலயம்
இதனால் 14 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், பெயர் பலகைகள் பெயர்ந்து சென்றன. இந்த ஃபனி விலங்குகள் ,பறவைகளையும் விட்டு வைக்கவில்லை. பறவைகள் சரணாலயம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை சின்னாபின்னமாகின.

மரணம்
புரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ருத்ரதாண்டவம்
கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ஃபனி புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications