Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எபோலா பாதித்த லைபீரியாவிலிருந்து டெல்லி வந்த 112 இந்தியர்கள்.. தீவிர பரிசோதனை!

Subscribe to Oneindia Tamil

மும்பை: எபோலா பாதித்த லைபீரியாவில் இருந்து 112 இந்தியர்கள் டெல்லி, மும்பை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகே வெளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"லைபீரியாவிலிருந்து மும்பை வந்த விமானத்தை தனி இடத்திற்குக் கொண்டு சென்று, பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தினை அவர்கள் வந்தடைந்தனர்" என்று மும்பை சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

112 Indians Arriving from Ebola-Hit Liberia; Mumbai, Delhi Airports Gear Up

எபோலா பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லாத பயணிகள் சோதனைக்குப் பின் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட பயணிகள் நேரடியாக குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு பரிசோதனைப் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பப்பட்டனர்.

இந்த பயணிகள் லைபீரியா, வட ஆப்ரிக்கா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்தவர்கள் ஆவர்.

இந்த பரிசோதனைக்கு முக்கிய காரணமே அவர்கள் மூலமாக எபோலா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என்று மேலும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+