பஞ்சாப் பைப் தொழிற்சாலையில் “தீ”- 12 பேர் பலி; 2 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பைப் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 12 பேர் கருகி உயிர் இழந்துள்ளனர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்து உள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை மோசமாக உள்ளது'' எனக் கூறியுள்ளார்.

ஜலந்தர் நகர உதவி போலீஸ் கமிஷனர் அவ்னீத் காவண்டல் கூறும்போது, ‘‘தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து துரிதமாக தீயை அணைத்து மாலை 3 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்'' என கூறியுள்ளார்.

‘‘தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அதுபற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+