டெல்லியில் ரசாயன வாயு கசிவு - பள்ளி மாணவர்கள் 120 பேர் திடீர் மயக்கம்
டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக 120 மாணவர்கள் கண் எரிச்சல், மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் என்னும் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை ரசாயன கன்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் சுமார் 120 குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சில மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மனிஷ் சிசோடியா
दिल्ली के तुग़लकाबाद में एक कंटेनर डिपो से गैस रिसाव हुआ था, पास के सरकारी स्कूल में बच्चों को काफ़ी problem हुई
— Manish Sisodia (@msisodia) May 6, 2017
1/N
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளியின் அருகே இருந்த கிடங்கு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 30 பேர் மயக்கமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் நிலையில் முன்னேற்றம்
मेरी छात्राओं और डॉक्टर्स से बात हुई है, सबकी हालात सामान्य है|
— Manish Sisodia (@msisodia) May 6, 2017
3/N
உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மயங்கிவிழுந்த மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம் பேசியுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications