டெல்லியில் ரசாயன வாயு கசிவு - பள்ளி மாணவர்கள் 120 பேர் திடீர் மயக்கம்
டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக 120 மாணவர்கள் கண் எரிச்சல், மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் என்னும் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இதில் இன்று காலை ரசாயன கன்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் சுமார் 120 குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் சில மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மனிஷ் சிசோடியா
दिल्ली के तुग़लकाबाद में एक कंटेनर डिपो से गैस रिसाव हुआ था, पास के सरकारी स्कूल में बच्चों को काफ़ी problem हुई
— Manish Sisodia (@msisodia) May 6, 2017
1/N
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளியின் அருகே இருந்த கிடங்கு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 30 பேர் மயக்கமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் நிலையில் முன்னேற்றம்
मेरी छात्राओं और डॉक्टर्स से बात हुई है, सबकी हालात सामान्य है|
— Manish Sisodia (@msisodia) May 6, 2017
3/N
உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மயங்கிவிழுந்த மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம் பேசியுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications