உ.பி.யில் அதிர்ச்சி... 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
Recommended Video

பெரெய்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பெரெய்லியில் 8 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பெரெய்லி அருகே உள்ள சிறிய கிராமம் சிபி காஞ்சு. இந்த ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஞாயிற்றுக்கிழமை அன்று அதே ஊரைச் சேர்ந்த 8 வயது சிறுமியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த சிறுவனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பெரெய்லி காவல் கண்காணிப்பாளர் அபினந்த்குமார் சிங் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருக்கின்றனர். மேலும் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆஸிபா, காமக் கொடூரன்களால் பாலியல் பலாக்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆராத நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலும் உற்று நோக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கற்பித்தல், நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications