கொல்கத்தாவில் தோண்ட தோண்ட சடலங்கள்.. ரசாயனம் தடவப்பட்ட நிலையில் 14 குழந்தைகளின் உடல்கள்!
கொல்கத்தாவில் நிலம் ஒன்றில் 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் நிலம் ஒன்றில் 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹரிதேவ்பூரில் என்ற மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இன்னும் அதிக அளவில் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது அங்குள்ள மக்களை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எப்படி கண்டுபிடித்தார்கள்
ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. அப்போதுதான் முதல் சடலம் கிடைத்துள்ளது. அதன்பின் வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க ரசாயனம்
இதில் குழந்தைகளின் உடல் முழுக்க முழுக்க ரசாயனம் தடவப்பட்டுள்ளது. அதோடு எல்லா குழந்தைகளும் தனித்தனியாக பிளாஸ்டிக் பேக்குகளில் கட்டப்பட்டுள்ளது. இதில் தடவப்பட்ட ரசாயனம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை நடத்தி வருகிறார்கள்
இந்த உடல்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் விசாரித்து வருகிறார்கள். கருக்கள் கூட இருப்பதால், வேறு எதாவது பிரச்சனை நடந்து இருக்கலாமா என்று விசாரிக்கப்படுகிறது.

தொடர்ந்து தேடுகிறார்கள்
இந்த நிலையில் அங்கு போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். அதோடு அருகாமையில் உள்ள இடங்களில் குழி தோண்டி வருகிறார்கள். அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு இன்னும் அதிக சடலங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications