காணாமல் போன 17 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர்?
டெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., இந்திய இளைஞர்களை சேர்ப்பதில் மும்முரம் காட்டிவருகிறது. இந்தியாவில் காணாமல் போன 17 இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கலா என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் விஸ்வரூபமானது இந்திய துணைக் கண்டத்தை எட்டியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலும் தமிழகத்திலும் கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்ட போதே உளவுத்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் பின்னர் மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிரியா சென்று அந்த இயக்கத்தில் இணைந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் இவர்களில் ஆரீப் என்பவர் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
தற்போதும் ஜம்மு காஷ்மீரத்தில் அவ்வப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள் பறக்கவிடப்படுவது உளவுத்துறையினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் அண்மையில் 12 மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உளவு அமைப்புகள் கண்காணித்து வரும் இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது; அல்லது அந்த இயக்கத்துக்கான வலிமையான தளத்தை இந்தியாவில் அமைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று கூறி விவாதித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பது என்பதை ஒதுக்கிவிட முடியாது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது 17 இந்திய இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திலோ அல்லது அதற்கு எதிரான ஜபால் அல் நுஸ்ரா இயக்கத்திலோ இணைந்திருக்கக் கூடும் என்றே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன என்பதும் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பலரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த இயக்கத்தின் 22 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயற்சித்த போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்திய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பக்கம் சாயாமல் இருப்பதற்காகவே அனைத்து மாநில அரசுகளையும் தொடர்ந்து மத்திய அரசு உஷார்படுத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications