ஐஐடி-ஜேஇஇ தேர்வில் மார்க் குறைவு: மாடியில் இருந்து குதித்து 17 வயது சிறுமி தற்கொலை
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஐஐடி-ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 வயது சிறுமி குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் 5 அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரை சேர்ந்தவர் கிரித்தி திரிபாதி(17). அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்காக படித்து வந்தார். ஐஐடி மற்றும் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர ஐஐடி-ஐேஇஇ தேர்வு எழுத வேண்டும்.

இந்நிலையில் கிரித்தி கடந்த மாதம் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வில் கிரித்தி தேர்ச்சி பெற்றிருந்தார். 132 நகரங்களில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் கிரித்தி மனமுடைந்தார். இதையடுத்து அவர் 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு 5 அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரித்தி காசியாபாத்தை சேர்ந்தவர். ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்காக படிக்கவே கோட்டா நகருக்கு தனது தந்தையுடன் வந்து தங்கியிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications