பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி 7ம்தேதி துவக்கம்: விமரிசையாக நடத்த முடிவு
பெங்களூர்: புகழ்பெற்ற லால்பாக் பூங்காவில் சுதந்திர தினத்தையொட்டி வரும் 7ம்தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது.
பெங்களூரில் லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். அதன்படி, 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லால்பாக் மலர் கண்காட்சி வரும் 7ம் தேதி தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநில தோட்டக்கலைத்துறை, மைசூர் பூங்கா சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்த கண்காட்சியில் பூங்காவின் கண்ணாடி மாளிகையில் 300க் கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 50 ஆயிரம் ரோஜா மலர்கள் இடம் பெறுகிறது.
ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டூன் வடிவிலான மலர் காட்சிகளும், மிருகங்களின் உருவத்திலும் மக்களை கவரும் வகையில் கண்காட்சியில் பூக்கள் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இது லால்பாக்கில் நடத்தப்பட உள்ள 200வது மலர் கண்காட்சியாகும். இதனால் விமரிசையாக விழாவை நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட கர்நாடகாவிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பெங்களூர் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications