கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்
அமராவதி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்காக 25 நாடுகள் காத்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் தற்போது அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வரகிறது. இலங்கை போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா அளித்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பு மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் 25 நாடுகள் இந்திய மருந்துகளை பெற வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்டங்களாக அந்த நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஏழை நாடுகள், விலை மதிப்பிலான நாடுகள் மற்றும் நேரடியாக மருந்து தயாரிப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ள நாடுகள் என 3 பிரிவுகளாக மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலேயே 15 நாடுகளுக்கு இதுவரை மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் 25 நாடுகளுக்கு பல்வேறு நிலைகளாக அனுப்பப்பட உள்ளன. ஆனால் இன்று இந்தியா செய்தது உலக வரைபடத்தில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும். உலகின் மருந்தகமாக இந்தியானை மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்றார்.
ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்த கோவேக்சின், ஆக்ஸ்போர்ட் கோவிட் தடுப்பு பிரிவுடன் சீரம் இந்தியா இணைந்து தயாரித்த மருந்து என 2 மருந்துகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications