கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்
அமராவதி : இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிகளை பெறுவதற்காக 25 நாடுகள் காத்துக் கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் தற்போது அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வரகிறது. இலங்கை போன்ற நாடுகளுக்கு இலவசமாகவும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா அளித்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் 19 தடுப்பு மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் 25 நாடுகள் இந்திய மருந்துகளை பெற வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்டங்களாக அந்த நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஏழை நாடுகள், விலை மதிப்பிலான நாடுகள் மற்றும் நேரடியாக மருந்து தயாரிப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ள நாடுகள் என 3 பிரிவுகளாக மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலேயே 15 நாடுகளுக்கு இதுவரை மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் 25 நாடுகளுக்கு பல்வேறு நிலைகளாக அனுப்பப்பட உள்ளன. ஆனால் இன்று இந்தியா செய்தது உலக வரைபடத்தில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும். உலகின் மருந்தகமாக இந்தியானை மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்றார்.
ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்த கோவேக்சின், ஆக்ஸ்போர்ட் கோவிட் தடுப்பு பிரிவுடன் சீரம் இந்தியா இணைந்து தயாரித்த மருந்து என 2 மருந்துகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications