திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயம்- திடுக் தகவல்!!
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 266 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த வினோத்ராய் குழுவின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கேரளாவில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை மன்னர் குடும்பத்தினர் அபகரிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோரை நியமித்து கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வினோத்ராய் தலைமையிலான குழு கோவிலின் ரகசிய அறைகள், நகைகள், வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் இருந்த நகைகள் சுமார் 82 முறைகள் எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 893.44 கிலோ தங்க ஆபரணங்கள், பொருட்கள் பொக்கிஷ அறையில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 627 கிலோ தங்க ஆபரணங்களே மீண்டும் பொக்கிஷ அறைகளில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 266 கிலோ தங்க நகைகள் மாயமாகி உள்ளன.
இதுபோல பக்தர்களால் கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட நகைகள் என்ன ஆனது? என்ற விவரமும் தெளிவாக இல்லை. உண்டியல் பணம் மற்றும் வரவு-செலவு விவரங்களிலும் பல குளறுபடிகள் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மூலம் கோவிலை பராமரித்து வரும் மன்னர் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி மன்னர் குடும்பத்தினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications