2ஜி ஊழல்.. ராசா, கனிமொழி மீதான குற்றப்பத்திரிக்கை தயார்... விரைவில் அமலாக்கப் பிரிவு தாக்கல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, கனிமொழி ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு விரைவில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
குற்றப்பத்திரிக்கைத் தயாரிக்கப்பட்டு அது சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாம். அது முடிந்த பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

திமுகவுக்குச் சொந்தமான கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி நிதியை திருப்பி விட்டது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் டிவிக்கு முறைகேடான வகையில் ரூ. 200 கோடியை திருப்பி விட்டதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. எனவேதான், இதுதொடர்பாக சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை மத்திய அமலாக்கத்துறை கேட்டிருக்கிறதாம்.
-
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications