ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சிபிஐ கோர்ட் நடத்த மாறன் சகோதரர்கள் எதிர்ப்பு: செப். 6-ல் இறுதி முடிவு!
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீதான ஏர்செல்- மேக்சிஸ் பங்குகளை முறைகேடாக விற்பனை செய்து; அதன் மூலம் சன் டிவி ரூ743 கோடி ஆதாயம் அடைந்தது தொடர்பான வழக்கும் நீதிபதி ஓபி ஷைனியின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மீதான விசாரணையின் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு முன் ஜாமீன் வழங்க மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தது.
Aircel-Maxis deal: Special 2G court reserves order on whether court has jurisdiction to try the deal, likely to pass order on Sep 6
— ANI (@ANI_news) August 27, 2016
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிமன்றம் வரம்புக்குள் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை வராது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தமது கருத்துகளை முன்வைத்த தயாநிதி தரப்பு வழக்கறிஞர் ரெபேகா, ஏர்செல் மேக்சிஸ் பிரச்சனை என்பது தனிநபர் சார்ந்தது; இரு வர்த்தக நிறுவனங்களிடையேயான பிரச்சனை. சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவைப் பொறுத்தவரையில் தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்; இந்த கம்பெனிகள் விவகாரமும் தொலைத் தொடர்பு துறை சார்ந்தது என கருதுகிறது. இதற்காக எமது தரப்பு தவறு செய்தது என்றாகிவிடாது என்று வாதிட்டார்.
சிபிஐ தரப்பில், உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் சிபிஐ விசாரணை நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என கூறியிருந்தது என சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கை எந்த நீதிமன்றம் நடத்துவது என்பது குறித்து செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் எனக் கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications