ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சிபிஐ கோர்ட் நடத்த மாறன் சகோதரர்கள் எதிர்ப்பு: செப். 6-ல் இறுதி முடிவு!
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீதான ஏர்செல்- மேக்சிஸ் பங்குகளை முறைகேடாக விற்பனை செய்து; அதன் மூலம் சன் டிவி ரூ743 கோடி ஆதாயம் அடைந்தது தொடர்பான வழக்கும் நீதிபதி ஓபி ஷைனியின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மீதான விசாரணையின் போது தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போதும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு முன் ஜாமீன் வழங்க மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தது.
Aircel-Maxis deal: Special 2G court reserves order on whether court has jurisdiction to try the deal, likely to pass order on Sep 6
— ANI (@ANI_news) August 27, 2016
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிமன்றம் வரம்புக்குள் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை வராது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தமது கருத்துகளை முன்வைத்த தயாநிதி தரப்பு வழக்கறிஞர் ரெபேகா, ஏர்செல் மேக்சிஸ் பிரச்சனை என்பது தனிநபர் சார்ந்தது; இரு வர்த்தக நிறுவனங்களிடையேயான பிரச்சனை. சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவைப் பொறுத்தவரையில் தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்; இந்த கம்பெனிகள் விவகாரமும் தொலைத் தொடர்பு துறை சார்ந்தது என கருதுகிறது. இதற்காக எமது தரப்பு தவறு செய்தது என்றாகிவிடாது என்று வாதிட்டார்.
சிபிஐ தரப்பில், உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் சிபிஐ விசாரணை நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என கூறியிருந்தது என சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கை எந்த நீதிமன்றம் நடத்துவது என்பது குறித்து செப்டம்பர் 6-ந் தேதி முடிவெடுக்கப்படும் எனக் கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications