For Daily Alerts
Just In
கேரளத்தில் தொடரும் சோகம்... வீடு இடிந்து 3 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரள மாவட்டத்தில் பத்தினம்திட்டா பகுதியில் வெள்ளத்தால் வீடு இடிந்து 3 பேர் பலியாகிவிட்டனர்.
கேரளத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை ஓரளவுக்கு நின்றுவிட்ட போதிலும் இன்னும் அங்குள்ள மக்கள் சிலர் மீட்க முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் செங்கண்ணூர் பகுதியில் வீடு இடிந்தது.
இதில் வீட்டில் இருந்த தாய், மகன், பேத்தி ஆகியோர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 1.400 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments
English summary
3 died as a result of house collapsed in Pattinamtitta district, Kerala.
Story first published: Saturday, August 18, 2018, 8:59 [IST]