ஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தியர்கள்!
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியர்களுக்கு ரூ.40 லட்சம் வரை தருவதாக அது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களை அணுகி வருகிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இந்தியாவில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த 30 ஆயிரம் பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து தங்களின் தாய் நாடான இந்தியாவுக்கு எதிராக போராட தயாராக உள்ளனர். அந்த 30 ஆயிரம் பேரையும் ஐஎஸ்ஐஎஸ் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
தற்போது அந்த 30 ஆயிரம் பேரையும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் பற்றி தகவல்கள் உள்ள 94 இணையதளங்களை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது.