டெல்லி: சிறார் காப்பகத்தில் 33 இளம் குற்றவாளிகள் தப்பியோட்டம்
டெல்லி: டெல்லியில் சிறார்கள் காப்பகத்தில் இருந்த 33 இளம் குற்றவாளிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சிறார் காப்பகத்தின் பணம் வைக்கப்படும் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த 35 ஆயிரம் ரூபாயை வழி செலவுக்கு எடுத்துக்கொண்ட சுமார் 50 சிறுவர்கள் காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினர்.
கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சூறையாடிய அவர்கள், மதில் சுவரின் மேல் பகுதியில் உள்ள முள்வேலியின் மீது மெத்தைகளை விரித்து காப்பகத்தின் நிர்வாக பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு சூப்பிரண்ட் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகளை எல்லாம் தீயில் தூக்கிப் போட்டு எரித்தனர். அதேபோல் வெளிப்பகுதிகளில் உள்ள பூட்டிய மரக்கதவுகளையும் தீக்கிரையாக்கி சுமார் 33 இளம் குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர்.
அவர்களில் 15 பேரை போலீசார் பிடித்துள்ளனர். எஞ்சியுள்ளோரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகளுக்கு சற்றும் குறையாமல் இந்த சாகசத்தை சிறார் குற்றவாளிகள் நிகழ்த்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications