ஆந்திராவில் லாரி மீது மோதிய தனியார் பஸ்.. திருப்பதி சென்று திரும்பிய திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி
அமராவதி: ஆந்திராவில் நள்ளிரவில் நின்ற லாரி மீது தனியார் பஸ் திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் சாமி தரிசனத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பயங்கரமான விபத்து ஏற்பட்டது. கங்கசாகரம் எனும் பகுதியில் உள்ள திருப்பத்தில் விபத்து ஏற்பட்டது.
அதாவது திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தின் திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரியின் மீது மோதியது. இதில் தனியார் பஸ்சில் பயணித்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அருசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கங்கசாகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications