எஸ்சி எஸ்டி சட்ட திருத்தம் மீதான மறுசீராய்வை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மத்திய பிரதேசத்தில் கடையடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலால் 4 தலித்துகள் பலியாகிவிட்டனர்.
Recommended Video

போபால்: தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் திருத்தம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கடையடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் பலியாகிவிட்டனர். அந்த திருத்தத்தை மறுசீராய்வு செய்யும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் அதில் திருத்தங்களை கடந்த 20-ஆம் தேதி மேற்கொண்டது.

இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்பில் அதிகளவில் தலித்துகள் வசிக்கின்றனர். இதனால் இங்கு நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை அடுத்து பேருந்து போக்குவரத்தை அந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
10, பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின்போது மோதல் ஏற்பட்டது.
இதில் சிக்கி தலித் சமூகத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். இதனிடையே தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நிகழ்த்தப்பட்ட திருத்தங்களை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தியது. எனினும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications