ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்!!
டெல்லி: ஈராக்கில் மாயமான 40 இந்தியர்கள் சதாம் ஆதரவுப் படையினரால் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கடந்த 2 வாரங்களாக முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ்., பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களுக்கான நாடு அமைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

இந்த நிலையில் சதாம் ஆதரவுப் படை வசம் வீழ்ந்த மொசூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 இந்திய கட்டுமான பணியாளர்கள் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஈராக்குக்கு இந்தியாவின் சிறப்பு தூதராக சுரேஷ் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து இன்று காலையில் தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பரூதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஈராக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அந்த 40 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அக்பருதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடத்தப்பட்டோரை விடுவிக்க பிணையத் தொகை கோரியோ அல்லது வேறு எந்த ஒரு தகவலுடன் இதுவரை யாரும் தொடர்பும் கொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்தியர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்துமாறு அவர்களிடம் கேட்டிருக்கிறோம் என்றார்.
முன்னதாக டெல்லியில் நேற்று கிழக்கு நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சக செயலர் அனில் வாத்வா, இந்தியாவுக்கான ஈராக் தூதர் அகமது தெர்வாரியை சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications