தண்டனை முடிந்து திரும்பிய தந்தை.. ஆன்லைன் வகுப்புக்காக சிறையில் சம்பாதித்த காசில் மகளுக்கு செல்போன்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வீடு திரும்பிய தந்தை, மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு குடும்பத் தகராறால் தாய்மாமாவை கொலை செய்தவர் நாகேஷ்யா (40). இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக 15 ஆண்டுகள் கழித்து இவர் விடுதலை ஆகினார்.
சிறைக்கு செல்லும் போது ஒரு வயது மகள் யாமினியை இத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்தார். வீட்டுக்கு சென்றார்.

அவதி
அப்போது ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் மகள் யாஷினி மிகுந்த அவதி அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் செல்போன் கேட்டு வகுப்பை கவனித்து வந்தார். இதை பார்த்த தந்தைக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து தான் சிறையில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றார்.

நாகேஷ்யா
அங்கு அவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார். யாமினி தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து நாகேஷ்யா கூறுகையில், நான் வீட்டுக்கு சென்ற போது தனக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க போன் இல்லை என என் மகள் என்னிடம் தெரிவித்தார். அவர் மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர்.

கல்வி
அவர் மருத்துவராக விரும்புகிறார். கல்வியின் முக்கியத்துவத்தை நான் சிறையில் உணர்ந்தேன். என் மகளின் கனவை நிறைவேற்ற இதுவரை நான் எதையும் செய்ததில்லை. அதனால் செல்போன் வாங்க முடிவு செய்து எனது மகளுக்கு அதை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.

நீர் பாய்ச்சுதல்
எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதை வைத்து விவசாயம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வேன் என்றார். சிறையில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், கார்பெண்டர் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் செய்தார். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு ரூ 60 அல்லது ரூ 75 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications