தண்டனை முடிந்து திரும்பிய தந்தை.. ஆன்லைன் வகுப்புக்காக சிறையில் சம்பாதித்த காசில் மகளுக்கு செல்போன்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வீடு திரும்பிய தந்தை, மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு குடும்பத் தகராறால் தாய்மாமாவை கொலை செய்தவர் நாகேஷ்யா (40). இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக 15 ஆண்டுகள் கழித்து இவர் விடுதலை ஆகினார்.
சிறைக்கு செல்லும் போது ஒரு வயது மகள் யாமினியை இத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்தார். வீட்டுக்கு சென்றார்.

அவதி
அப்போது ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் மகள் யாஷினி மிகுந்த அவதி அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் செல்போன் கேட்டு வகுப்பை கவனித்து வந்தார். இதை பார்த்த தந்தைக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து தான் சிறையில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றார்.

நாகேஷ்யா
அங்கு அவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார். யாமினி தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து நாகேஷ்யா கூறுகையில், நான் வீட்டுக்கு சென்ற போது தனக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க போன் இல்லை என என் மகள் என்னிடம் தெரிவித்தார். அவர் மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர்.

கல்வி
அவர் மருத்துவராக விரும்புகிறார். கல்வியின் முக்கியத்துவத்தை நான் சிறையில் உணர்ந்தேன். என் மகளின் கனவை நிறைவேற்ற இதுவரை நான் எதையும் செய்ததில்லை. அதனால் செல்போன் வாங்க முடிவு செய்து எனது மகளுக்கு அதை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.

நீர் பாய்ச்சுதல்
எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதை வைத்து விவசாயம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வேன் என்றார். சிறையில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், கார்பெண்டர் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் செய்தார். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு ரூ 60 அல்லது ரூ 75 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications