போதையில் 90 வயது மாமியாரை பலாத்காரம் செய்த 50 வயது மருமகன்... கேரளாவில் அதிர்ச்சி
போதையில் 90 வயது மாமியாரை பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோழிக்கோடு: கேரளாவில் 90 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மெப்பயூர் பகுதியில், திருமணமான தனது மகளின் வீட்டிற்கு அருகே தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார் 90 வயது மூதாட்டி ஒருவர்.
கடந்த வியாழனன்று மதியம் மகள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட, தனது வீட்டில் மூதாட்டி மட்டும் தனியே இருந்துள்ளார்.
மருமகனின் மது போதை
அப்போது மது போதையில் அங்கு வந்த மகளின் 50 வயது கணவர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், முதியவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
14 நாள் சிறைக் காவல்
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்நபரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சம்பவத்தின் போது அந்நபர் போதையில் இருந்தது மருத்துவ சோதனையில் உறுதியாகியுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் வழக்கு
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பாட்டி தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியில் கேரளா
போதையில் 90 வயது மூதாட்டியை மருமகனே பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைமகள் அதிகரித்து வருவதை கவலை தரும் நிலையில் 90 வயது பாட்டிக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.