For Daily Alerts
Just In
இஸ்ரோ: வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் - 6 முக்கிய தகவல்கள்
இன்று, வெள்ளிக்கிழமை காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
இது குறித்த 6 முக்கிய தகவல்கள்.
- பி.எஸ்.எல்.வி-சி 40 ராக்கெட்டின் முதன்மை செயற்கைக்கோளாக கார்டோசாட்-2 வகை செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது. பூமியை படம் எடுத்து அனுப்பி நிலத்தில் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றம் உள்ளிட்டவற்றை அறிய இந்த ஏவுகணை உதவும்.
- இன்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி 40 வகை ராக்கெட்டின் 42-ஆவது பயணம் ஆகும்.
- 710 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2 வகை செயற்கைக்கோளுடன் மேலும் 30 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 613 கிலோ மட்டுமே.
- இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 31 செயற்கைகோள்களில் மூன்று மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. மற்ற 28 செயற்கைக்கோள்களும் அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமானவை.
- இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வர்த்தக ரீதியாக செயற்கைகோள்களை ஏவ வெளிநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே இந்த 28 ஏவுகணைகளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
- கார்டோசாட்-2 உடன் இன்று விண்ணை நோக்கிப் பாய்ந்த மற்ற இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் 100 கிலோ எடையுள்ள மைக்ரோசாட் மற்றும் இந்தியன் நேனோ சேட்டிலைட்-1சி (INS-1C) ஆகியன.
பிற செய்திகள்:
- காஷ்மீர்: பெல்லட் குண்டுகளால் பார்வை இழந்த மாணவி பள்ளித் தேர்வில் சாதனை
- அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்
- 'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் வாழ்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்!
- அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானில் என்னவெல்லாம் நடக்கும்
- ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்
Comments
English summary
710 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2 வகை செயற்கைக்கோளுடன் மேலும் 30 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 613 கிலோ மட்டுமே.