For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மியான்மரில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

7 magnitude earthquake hits off Myanmar.

அதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உள்ளிட்ட பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும் மியான்மர்-இந்திய எல்லையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மோரே நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

English summary
Tremors were felt across east India, northeastern India and Delhi after an earthquake of magnitude 7 struck Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X