மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது
டெல்லி: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மியான்மரில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உள்ளிட்ட பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் மியான்மர்-இந்திய எல்லையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மோரே நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
People in Kolkata vacate their residences in wake of tremors felt in the city. Earthquake magnitude 7.0 hit Myanmar pic.twitter.com/ExRrUiVhuB
— ANI (@ANI_news) April 13, 2016