ஜெகன் அதிரடி- தனியார்துறை வேலைவாய்ப்பில் ஆந்திரா இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அமல்!
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் தனியார் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் அம்மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அமல்படுத்தியிருக்கிறார்.
அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களைக் கொடுத்து தென்னிந்திய மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடமாநில இளைஞர்கள் அபகரித்து கொள்கின்றனர். அதேபோல சொற்ப கூலிக்காக தனியார்துறையில் பணிபுரிய வடமாநில இளைஞர்கள் பெருமளவு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் குடியேறி உள்ளனர்.

இதனால் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தனியார் துறைகளின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்; இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால போராட்டம்.
இந்நிலையில் ஆந்திராவில் அதிரடியாக தனியார்துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தனியார்துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70% இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை அம்மாநில முதல்வர் கமல்நாத் நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications