சட்டிஸ்கர் கருத்தடை முகாமில் விபரீதம் - 8 பெண்கள் மரணம், 15 பேர் சீரியஸ்
பிலாஸ்பூர்: சட்டிஸ்கரில் நடந்த கருத்தடை முகாமில் சிகிச்சைப் பெற்ற 8 பெண்கள் திடீரென மரணமடைந்தனர். 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிலாஸ்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த கருத்தடை சிறப்புமுகாமுக்கு அரசு ஏற்பாடு செய்திரு்ந்தது. சட்டிஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அமர் அகர்வாலின் சொந்த ஊர் பிலாஸ்பூராகும்.
இங்கு நடந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கருத்தடை அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பல பெண்களுக்கு, திடீரென வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல பெண்கள் மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கென அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வந்த பெண்களில் 8 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் 5 மணி நேரத்தில் 83 பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர் டாக்டர்கள். எனவே, இதில் அலட்சியம் ஏதேனும் இருந்ததா என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நாளில் பலருக்கு அறுவைச் சிகிச்சை செய்த போதிலும் டாக்டர்கள் தரப்பில் அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 8 பேரின் மரணத்திற்கான காரணத்தை டாக்டர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டியை மாநில அரசு அமைத்துள்ளது.
உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications