டெல்லியில் பெண்களுக்கு மட்டுமல்ல.. வாகனங்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லையே!
டெல்லி: டெல்லியில் பெண்களுக்கும், அவர்களது கற்புக்கும்தான் பாதுகாப்பு இல்லை என்பார்கள் பொதுவாக. ஆனால் இங்கு வாகனங்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. தினசரி 84 ஆட்டோ திருட்டு வழக்குகள் பதிவாகிறதாம் அங்கு.
ஆட்டோக்கள் என்று இல்லை, பல வகையான வாகனங்களும் அங்கு சரமாரியாக திருடப்படுகிறதாம். பார்க்கிங் பகுதிகள் பலவற்றில் சிசிடிவி கண்காணிப்பு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் எந்த வாகனத்தையும் பொது இடத்தில் நம்பி நிறுத்திச் செல்ல முடியாது என்ற அளவுக்கு திருடர்களின் அட்டகாசம் உள்ளதாம்.

21,417 திருட்டு வழக்கு...
இந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 21,417 வாகனத் திருட்டு புகார்கள் டெல்லி காவல்துறைக்கு வந்துள்ளதாம்.

கடந்த வருடத்தை விட மோசம்...
இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 15,530 திருட்டுப் புகார்களாக இருந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு படு மோசம் என்ற நிலை மக்களையும், காவல்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

38 சதவீதம் அதிகரிப்பு...
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 38 சதவீத அளவுக்கு வாகனத் திருட்டு அதிகரித்திருப்பது திருடர்கள் எந்த அளவுக்கு "உற்சாகமாக பணியாற்றுகிறார்கள்" என்பதைக் காட்டுவதாக உள்ளது.

தினசரி 84 வாகனங்கள் திருட்டு...
தினசரி சராசரியாக 84 வாகனங்கள் டெல்லியில் திருடப்படுகிறதாம். இது கடந்த ஆண்டு 64 ஆக இருந்தது.

2012, 13 பரவாயில்லை...
அதேசமயம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இது 40 வாகனங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டுகளை விட சமீப ஆண்டுகளில் திருட்டு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

3 ஆண்டுகளில் 75 சதவீதம் அதிகரிப்பு...
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் வாகனத் திருட்டுக்களின் அளவு 75 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல மாநிலத் திருடர்கள்...
டெல்லியில் வாகனத் திருட்டில் ஈடுபடுவது அக்கம் பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த கும்பல்கள்தான். அதாவது ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு திருடி அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் விற்று விடுவார்களாம்.

பிரித்து விற்கிறார்கள்...
திருடப்பட்ட வாகனங்களை அப்படியே விற்பதில்லையாம். மாறாக ஸ்பேர் பார்ட்க்ளைப் பிரித்து விற்று விடுவார்களாம். இதனால் திருட்டுப் போன வாகனத்தைக் கண்டுபிடிப்பது மிக மிக கடினம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications