370-வது ரத்துக்குப் பின் முதல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. 909 பேர் வேட்பாளர்களாக போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தலில் மொத்தம் 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சட்டசபை பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே என மாற்றப்பட்ட பின்னரான முதலாவது தேர்தல் இது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 90 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18, 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25, 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும். 3 கட்ட வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2019-ல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை உண்டு. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2019-ல் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் சட்டசபை பதவிக் காலம், இதர மாநிலங்களைப் போலவே 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவிலை. 2014-ம் ஆண்டுதான் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக தேர்தல் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பயங்கரவாதிகளுக்கு உதவியதால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ரஷீத் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட 1127 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றில் 164 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 54 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து. 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16, ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள்.
2-வது கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறுகிறது. 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 240 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
3-வது கட்ட தேர்தல் எஞ்சிய 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும். 3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 450 பேர் வேட்பாளர்கள்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களமானது 370-வது பிரிவு ரத்தை மையமாகக் கொண்டதாக உருவெடுத்துள்ளது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்துகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்; அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர நெருக்கடி தருவோம் என்கிறது காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications