பெங்களூரில் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
பெங்களூரு கட்டட விபத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பெங்களூரு: சிலிண்டர் வெடித்ததால் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பெங்களூரு எஜிபுராவில் கடந்த திங்கள் கிழமை சிலிண்டர் வெடித்ததில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய 3 வயது குழந்தை சஞ்செனா உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் குழந்தையின் பெற்றோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
3 மணி நேரங்கள் டன் கணக்கில் குவிந்த கட்டட இடிபாடுகளை மீட்புக் குழுவினர் கனரக எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிபாடுகளிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தீயணைப்புப் படையினரும், அவசரநிலை சேவைகள் அதிகாரிகளும் இடிபாடுகளை அகற்றி சஞ்சனா என்ற அந்த 3 வயதுக் குழந்தையை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட சஞ்செனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டதால் குழந்தையை கர்நாடக அரசே தத்தெடுத்து வளர்க்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications