For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு கட்டட விபத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: சிலிண்டர் வெடித்ததால் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.

பெங்களூரு எஜிபுராவில் கடந்த திங்கள் கிழமை சிலிண்டர் வெடித்ததில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

A 3 years old baby rescued from collapsed building dead in Bengaluru.

இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய 3 வயது குழந்தை சஞ்செனா உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் குழந்தையின் பெற்றோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

3 மணி நேரங்கள் டன் கணக்கில் குவிந்த கட்டட இடிபாடுகளை மீட்புக் குழுவினர் கனரக எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிபாடுகளிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

தீயணைப்புப் படையினரும், அவசரநிலை சேவைகள் அதிகாரிகளும் இடிபாடுகளை அகற்றி சஞ்சனா என்ற அந்த 3 வயதுக் குழந்தையை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட சஞ்செனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டதால் குழந்தையை கர்நாடக அரசே தத்தெடுத்து வளர்க்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A 3 years old baby dead in Bengaluru. The baby was rescued last Monday from the building collapse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X