எம்பியின் காலை கழுவி நீரை குடித்த பாஜக தொண்டர்.. கொடுமை!
Recommended Video
டெல்லி: பாஜக எம்பியின் காலை கழுவி தொண்டர் ஒருவர் அந்த நீரை குடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் கான்பாரி மற்றும் காலாளி கிராமங்களுக்கு இடையே தஜியா ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலம் அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பாலத்தின் திறப்பு விழா
சுமார் ரூ. 21 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலத்தை கட்டுவதற்கு கிராமத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று அந்த பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
தலையில் தெளித்து
அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் பவன்ஷா பாஜக எம்பியின் காலை ஒரு தட்டில் வைத்து கழுவி பின்னர் அந்த தண்ணீரை ஏதோ கோயில் தீர்த்தம் போல் குடித்து தலையில் தெளித்து கொண்டார்.
நன்றி கடன்
பின்னர் இந்த கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பாலம் கட்டுவதை நிறைவேற்றியதால் தான் இது போன்ற நன்றிக்கடனை செய்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
பாஜக எம்பி
எல்லாம் சரிதான் , தன்மானத்தை விட்டுவிட்டு இதுபோல் செயல்களில் பாஜகவினர் ஈடுபடுவது சரியா. இல்லை எம்பி, அமைச்சர் ஆகியோர்களை காக்கா பிடிப்பதற்காக செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இதையும் பாஜக எம்பி அனுமதித்தாரே அவரை என்ன சொல்வது?