பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி
பீகாரில் கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
பாட்னா: பீகாரில் கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகாரின் அராரியா பகுதியில் கார் ஒன்று 7 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததோடு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முற்றிலும் மூழ்க காரில் இருந்த 6 குழந்தைகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குழந்தைகள் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.