பாகுபலி வெற்றிக்காக தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர்
ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இருக்கும் தியேட்டர் ஒன்றில் பாகுபலி படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. படம் வெற்றி பெற வேண்டி ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் உள்ள பாகுபலி போஸ்டர் முன்பு ஆடு ஒன்றை வெட்டி பலி கொடுத்துள்ளார்.
ஆட்டை வெட்டியதோடு இல்லாமல் அதன் ரத்தத்தை எடுத்து போஸ்டர் மீது தெளித்துள்ளார் அந்த ரசிகர்.












Click it and Unblock the Notifications