ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்... பத்தனம்திட்டாவில் பதற்றம்
Recommended Video

பத்தனம்திட்டா: ஜீன்ஸ் அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி பக்தர்கள் முற்றுகையிட்டதால் பத்தனம்திட்டாவில் பதற்றமான சூழல் எழுந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகின்றன. கேரள மாநில பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலுக்குள் வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
[உயிரை விட்டாவது சபரிமலையை காப்பாற்றுவோம்.. கேரள பழங்குடிகள் உறுதி.. பரபரப்பு!]
எனினும் உச்சநீதிமன்றம் எந்த காலத்தை நிர்ணயிக்காததால் இன்று நடைதிறக்கும் நேரத்தில் பெண்கள் அங்கு செல்லக் கூடும் என்ற அங்கு பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நடை திறக்கப்பட்டது. இதனால் கேரள மாநில பேருந்தில் பம்பா செல்ல பத்தனம்திட்டாவில் பக்தர்கள் காத்திருந்தனர்.
அப்போது பம்பை செல்லும் பேருந்து ஜீன்ஸ் அணிந்து பெண் லிபி என்பவர் ஏற முயன்றார். அப்போது அவரை பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து பக்தர்கள் இறக்கி விட்டனர். மேலும் அந்த பெண்ணை சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்களுடன் லிபி கடும் வாக்குவாதம் செய்து வருகிறார். மேலும் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் போலீஸாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications