கர்நாடகாவில் கோர விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி
கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சதாம் உசேன், சதாம், முகமது, ஆசிப், ஷாருக் உள்ளிட்ட 11 பேர் காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்றிரவு கோவாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் தமிழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சித்திரத்துர்கா மாவட்டத்தில் அவர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது.

5 இளைஞர்கள் பலி
காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

25 வயதுக்குட்பட்டவர்கள்
உயிரிழந்த 5 இளைஞர்களும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இன்று காலை 5 மணிக்கு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உடற்கூறாய்வு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை சேர்ந்த லாரி
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியும் தமிழகத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

கிராம மக்கள் சோகம்
ரம்ஜான் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Thoppur NH: திகில்கள் நிறைந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு "ரெட் கார்டு"! தேசிய நெடுஞ்சாலை அதிரடி! -
மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பொன்னேரி அருகே கார் கவிழ்ந்து பலி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications