என்னை மன்னித்துவிடுங்கள்.. திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த மிஸ்டர்.திருடன்!
கேரளாவில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடன், மீண்டும் நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி அளித்து இருக்கிறான்.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடன், மீண்டும் நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி அளித்து இருக்கிறான்.
ஆலப்புழா அருகே இருக்கும் அம்பலப்புழாவில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கருமாடி என்ற பகுதியில் உள்ள, மது குமார் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த செவ்வாய் கிழமை திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை மறந்து பூட்டாமல் சென்றுள்ளார்.

பின் இரவுவீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் நகை திருடு போய் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார். சுமார் 3 பவுன் நகை காணாமல் போய் இருக்கிறது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதோடு தனக்கு யார் மேல், சந்தேகம் இருக்கிறது என்றும் கூர் போலீசிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ் அவர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில் விசாரிக்க தொடங்கியுள்ளனர். புதன் கிழமை அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே, வியாழக்கிழமை அவர்கள் வீட்டின் வாசலில் காணாமல் போன மொத்த நகையும் இருந்துள்ளது. அதில் ஒரு கடிதமும் இருந்துள்ளது.
அதில் ''என்னை மன்னித்துவிடுங்கள். பெரிய பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன். எனக்கு எதிராக போலீசில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம்.'' என்று மலையாளத்தில் எழுதியுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர், போலீசில் அளித்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications