ஆதார் கார்டு வழக்குகள்.. அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுமா? .. 11ம் தேதி தீர்ப்பு
டெல்லி: ஆதார் கார்டு தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 11 அன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
"ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வோ அல்லது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வோ முடிவெடுக்க முடியாது. எனவே, இது தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்" என மத்திய அரசு மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
ஊதியம் பெறுவது, திருமணப் பதிவு, சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி, அரசின் கூடுதல் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். முதலில் வாதாடிய முகுல் ரோத்தகி, "தனிநபர் ரகசியக் காப்புரிமை சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அடிப்படை உரிமையாகுமா? ஆம், எனில் தனிநபர் ரகசியக் காப்புரிமைக்கான வரையறைகள் என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் வாதடிய பிங்கி ஆனந்தும் இதே கேள்வியை எழுப்பினார். தனிநபர் ரகசியக் காப்புரிமை என்பது அடிப்படை உரிமையா? என்பதில் அதிகளவு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்துக்கும், குறைந்த அளவு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடு இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து, அந்தக் கேள்விகள் குறித்தும், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்தும் வருகின்ற செவ்வாய்க்கிழமை அதாவது ஆகஸ்ட் 11 அன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications