முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் காலமானார்.. கருத்தரங்கில் பேசிய போது திடீர் மாரடைப்பு
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங் : இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் மாரடப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82
மேகாலயாவில் ஐ.ஐ.எம்.மில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த போது கலாம் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியைடந்தனர். பின்னர் உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக கலாம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications