நீரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.. வழக்கு தொடர அபிஷேக் சிங்வி முடிவு
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.280 கோடி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சி.பி.ஐ.யால் தேடப்படும் நகைக்கடை அதிபர் நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊழலில் சாதனை படைத்துள்ள காங்கிரஸ் வங்கி மோசடி குறித்து மத்திய அரசை குறை சொல்கிறது என்றார்.

பாஜக அரசு நடவடிக்கை
உண்மையில் நிரவ் மோடி வங்கியில் மோசடி செய்தது கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் தான். மோசடி விவகாரம் தெரிந்ததும் நீரவ் மோடி மீது பா.ஜ.க. அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எம்.சிங்வியின் மனைவி அனிதா, நிரவ் மோடியின் நகைக்கடையுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

லீஸுக்கு கட்டடம் கொடுத்து
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தை புரமோட் செய்ததும் அவர்கள்தான் என்றும் லீஸுக்கு கட்டடம் கொடுத்ததும் அவர்கள் தான் என்றும் குற்றம்சாட்டினார். நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு இயக்குநராக அவர்கள் இருந்துகொண்டு பாஜக மீது குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.

நகைப்பு, கேலிக்குரியது
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஏஎம் சிங்வி, நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரின் குற்றச்சாட்டு "நகைப்பிற்குரியதாகவும், கேலிக்குரியதாகவும்" உள்ளது என அவர் நிராகரித்துள்ளார். தானோ அல்லது தனது குடும்பத்தினரோ கீதாஞ்சலி ஜெம்ஸ் அல்லது நீரவ் மோடி நிறுவனங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கமலா மில்ஸ் வாடகைதாரர்
தனது மனைவி மற்றும் மகன்கள் இயக்குநர்களாக இருந்த அட்வைட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கமலா மில்ஸ் நிறுவனத்தின் வாடகைதாரராக நீரவ் மோடி நிறுவனம் இருந்ததாகவும் அவர் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிரைஸ்டோன் வாடகைக்கு விடப்பட்டது என்றும் அதனுடன் தனது குடும்பத்தினருக்கோ அல்லது அட்வைட் நிறுவனத்துக்கோ தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமனுக்கு மிரட்டல்
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அவதூறு வழக்கை தாக்கல் செய்யவுள்ளேன் என்றும் இதே செய்தியை பரப்பிய ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் சிங்வி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications