கர்நாடகாவில் லாரி மரத்தில் மோதி விபத்து: 6 பேர் பலி; 15 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பூதக்கட்டி என்னும் இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மரம் வேரோடு சாய்ந்தது.

இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட ஆறு பேர் பலியாகினர். மேலும் லாரி மோதிய வேகத்தில் லாரி மோதிய வேகத்தில் சாய்ந்த மரம் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது விழுந்தது. இதில் அந்த வேனில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications