3 மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு ஆர்.சி வழங்குவது திடீர் நிறுத்தம்...
Recommended Video
டெல்லி: அனைத்து வகையான மோட்டார் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் வழங்குவது நாடு முழுவதும் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாஹன் (VAHAN) தரவுத்தளத்துடன் உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட்டுகள் ஒருங்கிணைக்கப்படாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள போக்குவரத்து ஆணையர் மற்றும் செயலாளரான அதிகாரி ராஜீவ் புத்தாலாத், வாகனம் பதிவு செய்வதற்கான போக்குவரத்து மிஷன் திட்டத்தின் பான்-இந்தியா விண்ணப்ப முறைக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தகவல் மையம் தகவல்களை அளிக்க இன்னும் அனுமதிக்கவில்லை

எனவே தற்காலிகமாக நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த கடுமையான நடவடிக்கை மூலம், எந்த மாநிலத்திலும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு ஆர்.சி. வழங்கப்படாது. ஆனால் இதற்கு மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் விலக்கு.
ஏனெனில் இந்த மூன்று மாநிலங்களும் 'வாகன்' தரவுதளத்திற்கு பதிலாக தங்கள் சொந்த மென்பொருளை பயன்படுத்துகின்றன. ஆகையால் மேற்கண்ட 3 மாநிலங்களில் மட்டும் புதிதாக பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு ஆர்.சி தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது
போலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல், விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளானது, வாகனத்திலிருந்து அகற்ற முடியாத, மறுமுறை பயன்படுத்த இயலாத வகையில் வாகனத்துடனேயே பொருத்தப்பட்டு வரும்.
உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் பழைய வாகனங்களுக்கும் அவற்றை விநியோகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications