நடிகை ஸ்ரீதேவி வீட்டில் நாசர்.. இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்!
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் நாசர் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் நாசர் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பால் அங்கேயே உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டும் இன்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்படும் என்றும் நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேற்று முதலே திரை பிரபலங்கள் அவரது வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவே மும்பை சென்ற நிலையில் நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் தற்போது மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாசர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications